விழியில் உன் விழியில் – Vizhiyil Un Vizhiyil Song Lyrics

கண்ணோடு
கண் சேரும் போது
வார்த்தைகள் எங்கே
போகும்

கண்ணே உன்
முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை
ஆகும்

 

விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

 வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

உன்னோடு
வாழ்ந்திடதானே நான்
வாழ்கிறேன்

உன் கையில்
என்னை தந்து தோள்
சாய்கிறேன் ஓ… தோள்
சாய்கிறேன்

விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

ஆ வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

 இதுவரை என்
இருதயம் இந்த உணர்வினில்
தடுமாறவில்லை

முதல்முறை
இந்த இளமையின்
சுகம் உணர்கிறேன்
நான் தூங்கவில்லை

குடையோடு
நான் போனேன்
வழியினில் ஏனோ
நனைகின்றேன்

கடிகாரம்
இருந்தாலும் காலடி
சத்தத்தில் மணி பார்த்தேன்

என் தனிமைக்கு
தனிமைகள் நீ வந்து
கொடுத்தாய்

விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

 வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

சிரிப்பிலே உன்
சிரிப்பிலே சிறை அடைக்கிறாய்
நான் மீளவில்லை

உறவுகள்
ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன்
என்று தெரியவில்லை

உன்னோடு
நான் பேசும் ஒவ்வொரு
வார்த்தையும் இனிக்கிறதே

உரையாடல்
தொடர்ந்தாலும் மௌனங்கள்
கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு
கனவுகள் நீ வந்து
கொடுத்தாய்

விழியில்
உன் விழியில்

வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

ம்ம் வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *