நினைத்து நினைத்து பார்த்தேன் – Ninaithu Ninaithu Pathen Male Song Lyrics

நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே

உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

 

அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா

தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ

உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா

பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா

தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *