கதைகளை பேசும் – Kadhaigalai Pesum Song Lyrics

கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே } (2)

ஓ என்னை
கேளாமல் எதுவும்
சொல்லாமல் கால்கள்
எங்கேயோ மிதக்கிறதே

ஓ இருளும்
இல்லாமல் ஒளியும்
இல்லாமல் வானம்
வண்ணத்தில் குளிக்கிறதே

கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

கோயிலின்
உள்ளே நுழைந்திடும்
போது வருகிற வாசனை
நீயல்லவா

உன்னுடன்
வாழும் ஒவ்வொரு
நொடியும் சர்க்கரை
தடவிய நொடியல்லவா

கல்லும்
மண்ணும் ஓ
வீடுகளில்லை

ஓ அன்பின்
வீடே ஓ அழிவது இல்லை

வெறும் கரையில்
படுத்துக்கொண்டு விண்மீன்
பார்ப்பது யோகமடா

உன் மடியில்
இருந்தால் வாழ்க்கையில்
எதுவும் தேவை இல்லையடி

ஓ கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

உனக்குள் தொடங்கி
உனக்குள் தானே எந்தன்
உலகம் முடிகிறதே

உன் முகம்
பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே

ஓ இரவின்
மடியில் ஓ குழந்தைகள்
ஆவோம்

ஓ இருட்டின்
நதியில் ஓ இறங்கி
போவோம்

நேற்றென்னும்
சோகம் நெருப்பாய் வந்து
தீ மூட்டும்

இன்றென்னும்
மழையில் அத்தனை
நெருப்பும் பூக்கள் நீட்டுமே

ஓ கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

ஓ என்னை
கேளாமல் எதுவும்
சொல்லாமல் கால்கள்
எங்கேயோ மிதக்கிறதே

ஓ இருளும்
இல்லாமல் ஒளியும்
இல்லாமல் வானம்
வண்ணத்தில் குளிக்கிறதே

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *