உனக்கென இருப்பேன் – Unakena Irupen Song Lyrics

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே
அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை
கண்கள்தாங்கும் கண்மணி
காதலின் நெஞ்சம் தான்
தாங்கிடுமா கல்லறை மீதுதான்
பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து
பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள்
மீது மைனாக்கள் கூடுகட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்

நிலவொளியை
மட்டும் நம்பி இலை எல்லாம்
வாழ்வதில்லை மின்மினியும்
ஒளிகொடுக்கும்

தந்தையும் தாயயும்
தாண்டிவந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான்
இருப்பேன் தோளிலே நீயுமே
சாயும் போது எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும்
நான் எதிா்ப்பேன்

வெந்நீரில் நீ
குளிக்க விறகாகி தீ
குளிப்பேன் உதிரத்தில்
உன்னை கலப்பேன்
விழிமூடும் போதும்
உன்னை பிரியாமல்
நான் இருப்பேன் கனவுக்குள்
காவல் இருப்பேன்

நான் என்றால்
நானே இல்லை நீ தானே
நானாய் ஆனேன் நீ அழுதால்
நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே
அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *